
வரலாற்றை மறைக்க முடியாது — நீதியை மறுக்கவும் முடியாது!
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் #மாபெரும்பேரணிக்கான பிரசாரப் பணிகள் வீச்சுடன் நடைபெற்று வருகின்றன.

தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Gajendrakumar Ponnambalam கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில், நல்லூர் மண்ணில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு மக்கள் விழிப்புணர்வுப் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பேரணி பற்றிய விவரங்கள்:
நாள்: 2026 செப்டம்பர் 13 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை
இடம்: யாழ்ப்பாண நகரம் ( கிட்டு பூங்கா நல்லூர் )
நமது உரிமைகளை வென்றெடுக்கவும், சர்வதேச நீதியைப் பெறவும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறோம








