வடக்கில் 96 குடும்பங்கள் மழையினால் பாதிப்பு!

0
392
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here