மாதகல் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது!

0
205




மாதகல் மற்றும் மன்னார்  கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த தீவிர தேடுதலில் சுமார்  53 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கடல்தொழில் நீரியல் வள  திணைக்களத்திடம்  பாரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கடற்படையினர்  தெரிவித்தனர்.Sequence-03_Still001
மாதகல் கடல் பரப்பில் அத்திமீறி தொழில்  நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என கூறி 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்
இவர்கள் அனைவரும் தமிழகத்தின்  நாகபட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.Sequence-03_Still002
5 மீன் பிடி படகுகளில் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள்  தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டுளார்கள்.
இவர்கள் இன்று யாழ். மாவட்ட  நீரியல் வள திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படுவார்கள் என்றும் இதன்பின்னர் நீதி மன்றில் முட்படுத்தபடுவார்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.Sequence-03_Still003
இதேவளை மன்னாரில் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களும் இன்று பிற்பகல் 2 மணியளவில் மன்னாருக்கு அழைத்துவரப்பட்டுஇ நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிபதி முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மன்னார் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பி.எஸ்.மிராண்டா தெரிவித்தார்.

WordPress database error: [User 'errimala_wo5437' has exceeded the 'max_questions' resource (current value: 1)]
SELECT FOUND_ROWS()

WordPress database error: [User 'errimala_wo5437' has exceeded the 'max_questions' resource (current value: 1)]
SELECT SQL_CALC_FOUND_ROWS wp_juyl_comments.comment_ID FROM wp_juyl_comments WHERE ( comment_approved = '1' ) AND comment_post_ID = 3039 AND comment_type NOT IN ('note') AND comment_parent = 0 ORDER BY wp_juyl_comments.comment_date_gmt ASC, wp_juyl_comments.comment_ID ASC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here