
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.
மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13 இல் இருந்து 16 ஆக உயர்த்துவதாகவும் அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இத்தடையை அறிவித்த பிரதமர் ஸ்டார்மர், இத்தடை அடுத்தாண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்றும், வயதை அடையாளம் காண முக ஸ்கேன்கள் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.இத்தடைத் திட்டத்திற்கு மெட்டா, டிக்டொக் ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் ஆட்சேபைனை தெரிவித்துளளன.
சிறுவர்கள் தங்கள் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இத்தடை, அவர்களைப் பாதுகாப்பற்ற சேவைகளை நோக்கித் தள்ளும். குறிப்பாக இளம் பருவத்தினரை மிகவும் தீங்கு விளைவிக்கும் தளங்களை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்றும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறியுள்ளன. டெலிகிராப், த கார்டியன்


