
சகாரா பாலைவனம் வழியாக பயணித்த டிரக் (சரக்குந்து) ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடுமையான தண்ணீர் தாகம் காரணமாக உ யி ரி ழந்துள்ளனர்.
அவர்களின் சடலங்கள் நேற்றுமுன்தினம் (05/06/2026) வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலி மற்றும் அல்ஜீரியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ‘அசமகா’ (Assamaka) பகுதியிலிருந்து மேற்கே 80 கிலோமீட்டருக்கும் அ தி க தொலைவில் இந்த டிரக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுள்ளது.
உயிரிழந்த அனைவரும் நைஜீரிய நாட்டவர்கள் ஆவர். இவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் வ ழி பா ட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு, மீண்டும் தங்களது நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த ப ய ங் கரமான துயரத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்திலிருந்து 2 பேர் உ யி ர் தப்பியுள்ளனர். அவர்கள் தண்ணீரைத் தேடி 50 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் நடந்தே சென்று, பின்னர் ‘அசமகா’ பகுதியை அடைந்துள்ளனர்.
அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின்படி, உடனடியாகச் செயற்பட்ட நைஜீரிய மீட்புக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை விரைந்து சென்றடைந்தனர்.
அங்கு, தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான டிரக்கின் கீழும், அதைச் சுற்றிலும் சிதறிக்கிடந்த 49 ச ட ல ங்களை அவர்கள் கண்டெடுத்தனர். பின்னர், அந்த சடலங்கள் அனைத்தையும் அதே இடத்தில் அ ட க்கம் செய்தனர்.


