பிரான்சில் சாவடைந்த பன்முக ஆளுமைக் கலைஞனின் “விடுதலையின் வேர்” மதிப்பளிப்பு!

0
75

கடந்த 2025 ஆம் ஆண்டு விடுதலையின் வேராக திரு. யஸ்ரின் தம்பிராஜா அவர்கள் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். தாயகத்திலும் பிரான்சு மண்ணிலும் கலையால் எமது தேசத்தின் விடுதலைப்போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றிய அறிக்கையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் அவர்கள் வாசித்தளிக்க அவருக்கான மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் , தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் பொன்னாடைபோர்த்தி அவருக்கான மதிப்பளிப்புப் பட்டயம் மற்றும், அறிக்கையையும் வழங்கி வைத்திருந்தனர். மதிப்பளிக்கப்பட்ட யஸ்ரின் அவர்கள் தனது வாழ்க்கை பயணத்தில் தனது அறிவிப்புப் பயணம் நடந்த நிகழ்வில் சங்கொலி பாடற்போட்டி நிகழ்வும் ஒன்று என்றும் தற்போதைய நிலையில் அந்த பழைய வீரியம் தற்போது தன்னிடம் இல்லாதபோதும் அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவருக்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட விடுதலையின் வேர் மதிப்பளித்தல் அறிக்கையின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

விடுதலையின் வேர் மதிப்பளித்தல்!

05.10.2025

தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக் குழியில் பிறந்து வளர்ந்த இவர், பாடசாலை காலத்தில் இருந்து ஒரு குருவாக (அருட்தந்தை) வரவேண்டும் என்னும் ஆர்வத்தில் குரு மடத்தில் சேர்ந்தார் அங்குதான் இவர் உரையாற்றும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் தொடர்ந்து பயிலச் சென்றிருந்தவர். இவையனைத்தும் நிகழ்ந்தது தனது பதின்ம வயதின் ஆரம்பங்களில் ஆகும். அதன் பின்னர் ஆன்மீக ரீதியாக பாடகர் குழாவிலும், அறிவிப்பாளராகவும் பணியாற்றியிருந்தவர். இவரின் அறிவிப்பின் திறன் அன்றைய காலத்தில் புகழ்பெற்ற அருணா இசைக்குழுவில், சுண்டுக் குழி ராஜன் இசைக்குழுவிலும் அறிவிப்பாளராக திகழும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

1987 காலப்பகுதியில் யாழ் ரமணன் அவர்களின் இசையில் உருவான தியாக தீபம் திலீபனின் நினைவாக மக்கள் மனதில் வற்றாத கண்ணீரை வரவழைத்த “ஓ.. மரணித்த வீரனே உன் பாதணிகளை எனக்குத்தா உன் ஆயுதங்களை எனக்குத்தா “எனும் புகழ்பெற்ற தமிழீழத் தேசிய பாடல் ஒளி வடிவமாக அன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டபோது அந்த ஒளிப் பேழையின் தொகுப்பாளராக முதல் முறையாக திரையில் தோன்றியிருந்தவர்.

தாயகத்தில் தொடர்ந்தும் வாழமுடியாதா நிலையில் புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணிற்கு வந்தபோதும் தனது இனத்துக்கான, கலைக்கான பணியை கலையின் ஊடாக இளையநிலா, ஈழநிலா போன்ற இசைக் குழுக்களில் தொகுப்பாளராக இருந்திருந்தார். அன்று வெளிவந்த ஒளி என்னும் சஞ்சீகைகளின் தொகுப்பாளராகவும் கடமை ஆற்றியிருந்தார்.

அரங்க நிகழ்ச்சிகளில் இருந்த இவரது பணி வானொலி துறை சார்ந்து செயல்பட தொடங்கியது, TRT, IBC போன்ற வானொலிகளின் தொகுப்பாளராக இருந்து வந்தவர். அதன்பின்னர் ஐரோப்பிய மண்ணில் தமிழீழ தேசியத் தொலைக் காட்சியான TTN தொலைக் காட்சியில் தொகுப்பாளராய் அறிவிப்பாளராய் நிகழ்ச்சித் தயாரிப்பாளராய் பல பயிற்சிகளோடு வளர்ந்தார். பிரான்சில் அன்று தொட்டு இன்று வரை தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஓர் உறுப்பினராய் தொகுப்பாளராய் தொடர்ந்து பணிசெய்து வருகிறார். தேசிய மாவீரர்நாள், மே 18, எழுச்சி நிகழ்வுகளிலும், வன்னிமயில், குறும்படப்போட்டிகள், போன்ற நிகழ்வுகளிலும் இவரின் காந்தக்குரல் மகிமை சேர்ப்பதோடு, நிகழ்வுகளுக்கேற்ப சோர்ந்து இருக்கும் மக்களை நகச்சுவைப்பேச்சால் சிரிக்க வைத்து அந்த நிகழ்வை நிறைவானதாக கொண்டு வருபவர். இத்துடன் எமது நடனக்குழந்தைகளின் எத்தனையே பரநாட்டிய அரங்கேற்றங்களில் அந்த நிகழ்வுகளுக்கான தேடல்களை தேடியெடுத்து ஒப்புவிப்பதும், தனது சக மொழி அறிவிப்பாளர்களையும் தட்டிக்கொடுத்து வளர்த்து வருபவர்.

எமது அடுத்த தலைமுறையினரை வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்களாக, தொகுப்பாளர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் பட்டறைகளையும் இவர் நடத்தியிருந்தவர்.. பயிற்சி ஊடகத்துறையில் வானொலி தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அறிவிப்பாளர் தயாரிப்பாளராக இருந்தது மட்டுமல்லாது சிறுகதை எழுத்தாளராகவும் நிறைவாய் Paristamil.com இனிய வழி பத்திரிகையில் செய்தியாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

எமது மொழி, கலைபண்பாடு கலாசாரம், எம் தேசத்தின் உன்னத விடுதலை, அந்த விடுதலைக்காக உயிர்தந்த மாவீரர்கள், மக்கள் புலத்தில் வாழும் தமிழர்கள் நாம் எப்படி வாழவேண்டும். எம் முதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று எமது குமுகாயத்தை விழிப்புணர்வு செய்யும் ஒளிஒலி வடிவில் முகநூல்களில் தனது காலத்தின் தேவையான விடயங்களை அர்ப்பணிப்போடு செய்துவருபவர்.

தன் இனத்திற்காகவும், கலைக்காகவும், மொழிக்காகவும், அதன் விடுதலைக்காகவும் பிரான்சு தேசத்தில் உழைத்துவரும் திரு. யஸ்ரின் அருள்ராஜா தம்பிராஜா அவர்களை 05.10.2025 இன்று தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்தும் சங்கொலி விருது 2025 (தாயக விடுதலைப் பாடற்போட்டி) நிகழ்வில் “விடுதலையின் வேர்கள்” என்ற உயரிய பட்டத்தை வழங்கி மதிப்பளிப்புச் செய்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here