
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு உறுப்பினரும், ஊடகவியலாளர்,அறிவிப்பாளர், எழுத்தாளர்,கவிஞர், பிராங்கோ தமிழ்ச்சங்க செயற்பாட்டாளர், என்னும் பன்முக ஆளுமை கொண்ட .ஜஸ்ரின் தம்பிராசா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று (17.08.2026) மாலை பாரிசில் சாவடைந்துள்ளார் என்பதை அறியத்தருவதுடன் எமது ஆழ்ந்த துயரையும் அனைவருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.


கடந்த 2025 ஆம் ஆண்டு விடுதலையின் வேராக திரு. யஸ்ரின் தம்பிராஜா அவர்கள் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். தாயகத்திலும் பிரான்சு மண்ணிலும் கலையால் எமது தேசத்தின் விடுதலைப்போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றிய அறிக்கையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் அவர்கள் வாசித்தளிக்க அவருக்கான மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் , தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் பொன்னாடைபோர்த்தி அவருக்கான மதிப்பளிப்புப் பட்டயம் மற்றும், அறிக்கையையும் வழங்கி வைத்திருந்தனர். மதிப்பளிக்கப்பட்ட யஸ்ரின் அவர்கள் தனது வாழ்க்கை பயணத்தில் தனது அறிவிப்புப் பயணம் நடந்த நிகழ்வில் சங்கொலி பாடற்போட்டி நிகழ்வும் ஒன்று என்றும் தற்போதைய நிலையில் அந்த பழைய வீரியம் தற்போது தன்னிடம் இல்லாதபோதும் அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு.


