
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவாக நடைபெற்ற சித்திரப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது ஏற்பாட்டுக்குழுவினரால் நடாத்தப்பட்டது.
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு விழா ஏற்பாட்டுக்குழுவினரால் நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்று சிறப்பான படைப்புகளை வெளிப்படுத்திய மாணவர்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுவினர், போட்டியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



















