பிரான்சில் இரு தினங்கள் இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள் – 2026

0
218

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (18.07.2026) சனிக்கிழமை மறுநாள் 19.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00, மணிக்கு Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES என்னும் இடத்தில் தெரிவுப்போட்டியாக இடம்பெற்றது.

இருதினங்களும் லெப்.கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக ஈகைச்சுடர் வினை கடந்த 1997 அன்று உயிலங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். இழந்தேன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

முதல்நாள் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடந்த 26.12.2007 அன்று வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

இரண்டாம்நாள் போட்டிகளில் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடந்த 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த லெப். நிறோ அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ‌சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தன.

பிரான்சு தேசத்தில் உள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களான

தமிழர் விளையாட்டுக் கழகம் 93,

தமிழர் விளையாட்டுக்கழகம் 94,

தமிழர் விளையாட்டுக்கழகம் 95,

ஈழவர் விளையாட்டுக்கழகம்,

நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்,

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்,

FC 93 விளையாட்டுக்கழகம்,

யாழ்டன் விளையாட்டுக்கழகம்

ஆகிய கழகங்களிடையே ஓட்டம், பந்தெறிதல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், கயிறடித்தல், நின்றுபாய்தல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பொருட்கள் சேகரித்தல, அஞ்சல் ஆகிய போட்டிகள் வயதடிப்படையில் சிறப்பாக இடம்பெற்றன.

போட்டியின் நடுவர்கள் சிறப்பாகத் தமது பணிகளைத் திறம்பட செய்திருந்தனர்

அறிவிப்பாளர்கள் தமது அறிவிப்பின் ஊடாக நிகழ்வை அழகாக வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழீழ உணவகத்தினரும் தமது சேவையை வழங்கியிருந்தனர்.

இப்போட்டிகளை நடத்துவதற்கு அனைத்துக் கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்களோடு, தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாளான நேற்றைய தினம் மாலை மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் சென்.பற்றிக்ஸ் அணியும் ஈழவர் வி.க.அணியும் மோதியிருந்தன.

தமிழீழத் தேசியக் கொடி தாங்கி இரு அணியினரையும் பிரமுகர்களையும் அழைத்துவரும் காட்சி நேர்த்தியாக அமைந்திருந்தது

சார்சல் மாநகரின் நகரபிதா மற்றும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆதரவையும் உணர்வையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

நிறைவாக ஈழவர் வி.க. அணியினர் உதைபந்தாட்டத்தில் 3:1 என்ற இலக்கில் வெற்றியைத் தமதாக்கினர்.

அவர்களுடைய வெற்றிக் களிப்பு உணர்வும் மைதானத்தில் பொங்கிப் பிரவகித்திருந்தது.

மாவீரர் நினைவு சுமந்த தெரிவு மற்றும் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வித்றிப் பகுதியில் இடம்பெறும் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது.

( தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு செய்திப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here