நீதி மறுக்கப்பட்ட 20 ஆண்டுகள்; யாழில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

0
12

🕯️ நீதி மறுக்கப்பட்ட 20 ஆண்டுகள்! செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 🕯️

​ஈழத் தமிழர் வரலாற்றின் ஆறா வடுவான செஞ்சோலைப் படுகொலையின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சுதுமலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

​தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் Sugash Kanagaratnam அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Gajendrakumar Ponnambalam , கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

​🩸 மறக்க முடியுமா அந்த கருப்பு நாளை?
20 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீலங்கா வான்படை செஞ்சோலை வளாகத்தின் மீது 16 கொடூரக் குண்டுகளை வீசி, 54 பிஞ்சுப் பாடசாலை மாணவிகளையும் 7 பணியாளர்களையும் அநியாயமாகப் படுகொலை செய்தது.

20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன… ஆனால், இந்த கொடூரக் இனப்படுகொலைக்கான நீதியும், சம்பந்தப்பட்டவர்கள் மீதான பொறுப்புக்கூறலும் இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை!

​நீதிக்கான குரல் ஓயாது! நமது நினைவேந்தல் தொடரும்! 🕊️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here