ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் உடலுக்கு தமிழர் கலை பண்பாட்டுக்கழகக் கொடி போர்த்தி மதிப்பளிப்பு!

0
62

பன்முகக் கலைஞர் அமரர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிரான்சில் இடம்பெற்றது.. அமரர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் உடலுக்கு, பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகக் கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது..

பிரான்சு பாரிசில் 17.08.2026 சுகவீனம் காரணமாக சாவடைந்த ஊடகவியலாளர், அறிவிப்பாளர், கலைஞர், எழுத்தாளர் என்ற பல்துறைக்கலைஞர் அமரர் ஜஸ்ரின் தம்பிராஜா அவர்களின் புகழ் உடலுக்கு இன்று பாரிசின் புறநகர் பகுதியான வில்த்தனுஸ் என்னும் இடத்தில் உள்ள மரணச்சடங்கு மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. காலை சரியாக 10.30 மணிக்கு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் கொடியுடனும், அவரின் திருவுருவப்படம் தாங்கி வர கலைஞர்கள், நண்பர்கள் அமரர் யஸ்ரின் அவர்களின் புகழ் உடல் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அமரர் யஸ்ரின் கலையால் தாயகத்திலும், புலத்திலும் பிரான்சிலும் செய்த பணிகள் பற்றியும் கடந்த 2025 ஆம் ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தவேளை அவர் வாழும் காலத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தேசிய ஆன்மாவின் சிந்தனைக்கு வழிசமைத்து சங்கொலி விருது தேசவிடுதலைப் பாடற் போட்டி நிகழ்வில் “ விடுதலையின் வேர் என்ற மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் செய்யப்பட்டதும்.

இன்று அவரின் இறுதி வணக்க நிகழ்வில் அவர் தேசம் நோக்கி செய்த பணிகள் வாசித்தளிக்கப்பட்டு “ விடுதலையின் வேர் என்ற மதிப்பளித்தலை அவரின் புகழ் உடலுக்கு தமிழர் கலைபண்பாட்டுக்கழக கொடியை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. அவரின் இறுதி வழியனுப்பும் நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் எனப்பலரும் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்ததோடு, இரங்கல் உரைகள், நினைவுப்பகிர்வுகள், அவரின் மகன் தந்தை பற்றிய பேச்சுகளும், நன்றி உரைகளும் இடம் பெற்றிருந்தன.
மாலை அவர் வசித்து வந்த பாரிசின் 93 பகுதி புறநகரான மொன்றோயல் தேவாலையத்தில் பூசை வழிபாடு நடாத்தப்பட்டு பொது மயானத்தில் புகழ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here