ஈருருளி மீது நீதி கேட்கும் போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பம்!

0
27

ஓர் இனத்தின் நீண்ட தொடர் வலியை நெஞ்சிலும் கால்களிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்டு தமிழீழ தேசத்தின் விடுதலைப்பற்றாளர்கள் இன்று 26.08.2026 புதன்கிழமை காலை பிரித்தானியாவிலிருந்து ஈருருளி மீது தமது பயணத்தை தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நீதிகேட்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிக்கான கோரிக்கைகளை அளித்து, 05.09.2026 யேர்மனி ஊடாக பிரான்சை வந்தடைந்து பிரான்சு ஈருருளிப் போராட்டத்தினருடன் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்து தொடர்ந்து சுவிசு ஜெனீவா எல்லை 09.09.2026 அன்று சென்றடைந்து போராட்டத்தை கையளிக்கவுள்ளனர்.

. பின்னர் சுவிசு வாரியாக ஈருருளிப்பயணப் போராட்டம் 14.09.2026 ஜெனீவா முருகதாசன் திடலில் நடைபெறும் நீதிக்கான பேரணியிலும், ஒன்றுகூடலிலும் இப்போராட்டம் ஒன்றிக்கவுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here