
கைத்தொலைபேசியை மின் ஏற்றியவாறு அதனை நெஞ்சில் வைத்துக் கொண்டு உறங்கிய இளைஞரொருவர் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி வெடித்துப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் குறித்த துயரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27.08.2026) மாலை 5 மணியளவில் நடந்துள்ளது.
தனது வீட்டில் கையடக்கத் தொலைபேசியைச் மின் ஏற்றியவாறு நெஞ்சில் வைத்துக் கொண்டு இளைஞரொருவர் உறங்கிய நிலையில் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைத்தொலைபேசி வெடித்து குறித்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த கமலேஸ்வரன் சங்கீதன் (வயது-19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குறித்த சம்பவம் வாழைச்சேனைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


