
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று பெளர்ணமி தினமான 27/08/2026 வியாழக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6மணி வரையும் இடம்பெறுகின்றது

39 ஆவது மாதமாகத் தொடரும் இப்போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கட்சி உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை குறித்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



