அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் அனுமதி!

0
162

மூத்த தமிழ்த்தேசியவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் கடந்த-11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பின் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (02.09.2026) புதன்கிழமை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் சுகம்பெற தமிழ் மக்கள் பிரார்த்திக்கின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here