யாழ்.தெல்லிப்பழையில் தந்தை செல்வா நினைவுத் தூபி விசமிகளால் உடைப்பு!

0
23

தந்தை செல்வாவின் தூபி உடைப்பு..!

தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

வல்லை–அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போருக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டிருந்தது.

தந்தை செல்வாவின் சமாதியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நினைவுத் தூபியே மர்ம நபர்களால் திட்டமிட்டு இடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here