கொழும்பில் மாணவர்களின் பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகம் !

0
614

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த எதிர்ப்புப் பேரணி கொழும்பிற்குள் நுழைவதற்கு நீதிமன்றம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பேரணியால் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிவீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here