இன்று (25) காலை 7.00 மணியளவில் இத்தாலி மிலானோவிற்கு அண்மையில் பயணிகள் தொடருந்து தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானதில் சம்பவ இடத்தில் மூவர் பலியானதுடன் பத்துப்பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடருந்தில் பயணம் செய்த 250 பயணிகளில் 100 பேர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


