தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
227

தேசத்தின் குரல் மதியுரைஞர், கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக ழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணியின் கந்தர்மடத்திலுள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் கஜே ந்திரகுமார் பொன்னம்பலம் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் கட்சியின் ஆதரவாளர்கள் பங் கேற்று தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
மூத்த பத்திரிகையாளரான அன்ரன் பாலசிங்கம், 1979ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனை, தமி ழகத்தில் சந்தித்தார். அன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தலைவ ருக்கும் பல்வேறு வழிகளில் துணை நின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மக்களாலும் பாலா அண்ணா என அழைக்கப் பட்ட அவர், 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 14 ஆம் திகதி லண்டனில் காலமானார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இறுதிவரை குரல் கொடுத்த அன்ரன் பால சிங்கத்துக்கு தேசியத் தலைவரால் தேசத்தின் குரல் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here