நெடுந்தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர் 10 பேர் கைது !

0
191


நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேரை சிறீலங்கா ங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறீலங்கா கடற்படையினர் அவர்களை கைது செய்தனர் . எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களையும், அவர்களின் படகையும் சிறைபிடித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here