வடமாகாணத்தில் வன்னிப் பிரதேச ஆசிரியர்கள் பாதிப்பு!

0
211

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்களது சேவைக் காலத்தை 2016 ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கணித்துள்ளமையால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களது 3 வருட சேவைக் காலம் கருத்திற்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகக் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 01.07.2013 அன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறிக்கொண்டு ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(ஆ) ற்குள் உள்ளீக்கப்பட்டார்கள்.

இவர்கள் ஆசிரியர்களாக கடந்த 2013ல் சேர்த்துக் கொள்ளப்பட்ட போது இவர்களுக்குரிய ஆசிரியர் சேவையின் தரம் 3 -11 கருத்திற் கொள்ளப்படாது.

இவர்கள் 2016 ஆம் ஆண்டே ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் 2013 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய 3 ஆண்டுகளும் கருத்திற் கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக ஏற்கனவே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தாம் தமது சேவைக் காலம் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றின் போது பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளபோது தமது சேவைக் காலத்தை தமக்கு நியமனம் வழங்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் திடீரெனப் பதவி விலக்கப்பட்டு புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்களின் சேவைக் காலம் 2016 ஆம் ஆண்டு நியமனம் பெற்றுள்ளதாகக் கணிக்கப்பட்டு தமது 3 வருட சேவைக் காலம் கருத்திற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களால் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட தமது சேவைக் காலத்தை 3 வருடங்களைக் கருத்திற்கொள்ளாது விட்டு தாம்மை 2016 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுள்ளதாக தமது சேவைக் காலத்தைக் கணிக்காது.

தாம் ஆசிரியர்களாக நியமனம் பெற்ற 2013 ஆம் ஆண்டிலிருந்தே தமது சேவைக் காலத்தைக் கணிக்க வடமாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here