பாரிசில் உணர்வுடன் நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள்! (காணொளி)

0
862

பிரான்சு பாரிசில் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2017 பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் 05.07.2017 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டமுறிப்பில் வீரச்சாவைத்தழுவிய வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரி ஏற்றி வைத்தார். வீரவேங்கை ஞானம் அவர்களின் சகோதரன் மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனையடுத்து செவ்ரோன் தமிழ்ச்சோலை, பரிஸ் 15, பரிஸ் 17, திரான்சி தமிழ்ச்சோலை மற்றும் ஆதிபராசக்தி நாட்டியபள்ளி மாணவிகளின் கரும்புலிகள்நினைவு சுமந்த எழுச்சி நடனங்கள், மற்றும் பரிஸ் 13 தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலி நினைவு சுமந்த பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களான திரு.மேத்தா, திரு.கோகுலன் ஆகியோர் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகளின் ஈகம்பற்றிய சிறப்புக்களை எடுத்துவிளக்கியிருந்தனர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
ஊடகப்பிரிவு -பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

https://youtu.be/rhBXoL8fkdE

https://youtu.be/eL-TzKtuAB8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here