பிரான்ஸில் கடும் குளிர்: செம்மஞ்சள் எச்சரிக்கை!

0
534

பிரான்ஸில் கடும் குளிர் நிலவிவருவதால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குளிர் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் மாகாணத்தில் உள்ள பத்து மாவட்டங்களுக்கு இன்று முதல் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தவாரம் இறுதிப்பகுதி வரை இந்த கடும் குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பத்து மாவட்டங்களையும் தவிர, ஏனைய மாவட்டங்களில் 0 செல்சியஸ் அளவு வரை குளிர் உறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கடும் குளிருடன் கூடிய காலநிலை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை அவதான மையம் அறிவித்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அடுத்தவாரம் இந்த நிலை மாற்றமடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த வாரக் கடைசியில் 5 டிகிரி வரை குளிர் செல்லக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்தவார இறுதியில் அதிகளவான பனிப்பொழிவு ஏற்பட்டிருந்ததுடன், 150 கி.மீ வேகத்துக்கு பனிப்புயல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here