மைத்திரியின் கூட்டத்திற்கு சென்ற இளைஞனுக்கு கொலை மிரட்டல் நெல்லியடி காவல்துறையில் முறைப்பாடு!

0
1515

Death-threats1792013பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்ற வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது என நெல்லியடி காவல்துறை நிலையத்தில் மேற்படி இளைஞரால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பொது எதிரணியின் பிரசாரக் கூட்டத்திற்கு மேற்படி இளைஞர் வரமுற்பட்டபோது தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எனினும் அதனை பொருட்படுத்தாது பிரசாரக் கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது வல்லைப் பகுதியில் வழி மறித்த இருவர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென அச்சுறுத்தியதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர்கள் இருவரும் மழை அங்கியுடன் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் மேற்படி இளைஞர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை தன்னை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் கொலை செய்யப்போவதாக அவர்கள் மிரட்டியுள்ளதாகவும் பிரஸ்தாப இளைஞர் நெல்லியடி காவல்துறை நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here