மட்டு வாகரையில் விபத்து; இரு பாடசாலை அதிபர்கள் வைத்தியசாலையில்!

0
13

மட்டு வாகரை ஊறியன் கட்டு பகுதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை அதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காத்தான்குடியில் இருந்து பணி நிமித்தம் காரணமாக கடமைகளை முடிந்துவிட்டு கதிரவெளி நோக்கி சென்று கொண்டிருந்த போது இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பால்சேனை பாடசாலை அதிபர் உதயன் அவர்களும், வம்மிவட்டவான் பாடசாலை அதிபர் இந்திரன் அவர்களுமே குறித்த வாகரையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதுவரை விபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை என்பதுடன், மேலதிக சிகிச்சைக்காக உதயன் அதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், இந்திரன் அதிபர் வாழைச்சேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here