வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை; மனைவி தற்கொலை!

0
126

வவுனியா நெடுங்கேணி் கிரிசுட்டான் பகுதி வீடோன்றில இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதே வேளை குறித்த நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் விஷம் அருந்திய நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் எனவும் அண்மைக்காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவரின் சடலம் விசாரணைகளின் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here