முல்லைத்தீவில் இடி மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
20

முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில், இன்று மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மழை பெய்த போது, மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மீது, இடி மின்னல் தாக்கம் விழுந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், ஐயங்கன்குளம் பகுதியை சேர்ந்த, முன்னாள் போராளியான, மூன்று பிள்ளைகளின் தந்தையான, 49 வயதான காளிமுத்து சண்முகராஜா உயிரிழந்துள்ளார்.

அத்துடன், புத்துவெட்டுவான் பகுதியை சேர்ந்த, 26 வயதான மகேந்திரன் பிரபாகரன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலதிக விசாரணைகளை, ஐயங்கன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here