இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலி!

0
116

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருவதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும், அதில் 8,000 குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் அடங்குவர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 2 மாதங்களை கடந்து நீண்டு வருகிறது.

சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்களுக்கு போர் நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் காசா மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. தப்போது முதல் தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு, பகல் பாராமல் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here