திருவாட்டி தான்கூர் சங்கரி அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இதய அஞ்சலி!

0
59

சேர்ஜி தமிழ்ச்சங்கத்தின் நீண்டகால உறுப்பினராகவும் கலைத்துறைப் பொறுப்பாளராகவும் இருந்த திருவாட்டி தான்கூர் சங்கரி அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது இதய அஞ்சலியை செலுத்துகின்றது.

தமிழ் மொழி மீது கொண்ட பற்றாலும் கலை மீதான பெருவிருப்பாலும் சேர்ஜி தமிழ்ச்சங்கத்தின் கலைமேம்பாட்டிற்காக அரும்பணி ஆற்றியது மட்டுமல்லாது தனது பிள்ளைகளுக்கும் தமிழ்மொழியை ஊட்டி உச்சம் தொடவிருந்தவேளை அன்னாரின் மறைவு குடுப்பத்தினருக்கும் அச்சங்கத்திற்கும் பெரும் இழப்பாகும்.

அன்னாரின் இழப்பில் இரங்கிவாடும் குடுப்பத்தினருக்கும் உறவுகளுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

எல்லாம்வல்ல இயற்கையின் மடியில் அமரர் சங்கரி இளைப்பாறட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here