யாழ்.நாவற்குழியில் QR குறியீடு இன்றி எரிபொருள் நிரப்ப மறுத்த ஊழியர் மீது வாள் வெட்டு!

0
71

தேசிய எரிபொருள் அட்டை (QR) குறியீடு இன்றி பெற்றோல் நிரப்ப முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (16) வியாழக்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு உந்துருளியில் வந்த இருவர் , பெற்றோல் நிரப்புமாறு கோரியுள்ளனர். இதன்போது ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது , QR இல்லாமல் நிரப்புமாறு கூறியுள்ளனர். அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது , ஊழியருடன் முரண்பட்டு , தமது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து ஊழியர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here