யாழில் மூதாட்டிப் படுகொலைச் சந்தேக நபர் 2வருடங்களின் பின் கைது!

0
226

தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதுடைய அவர் இரண்டு ஆண்டுகளாக புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில், மானிப்பாய்க்கு வருகை தந்திருந்தபோது காங்கேசன்துறை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

தெல்லிப்பழை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு மே 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here