யாழ்.உரும்பிராய் விபத்தில் தாயும் மகனும் பலி!

0
251

யாழ்ப்பாணம் உரும்பிராய் – மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய தாயும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சோகம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.

வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த உறவினர்களான ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்றுள்ளனர். இந் நிலையில் மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் படுகாயம் அடைந்திருந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது 68) அவருடைய மகனான மோகனதாஸ் திலீபன் (வயது 32) இருவரும் அதி தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டு கிச்சைபெற்றுவந்துள்ளனர்.

இந்நிலையில் தாயார் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தாயார் மறைந்த மறு நாள் மகனும் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனையவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here