கிளி.பூநகரியில் பெண் படுகொலை: கணவர் கைது!

0
375

கிளிநொச்சி – பூநகரி காவல்துறை பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

ரூபஸ் கிருஸ்ணகுமாரி (37-வயது) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here