கிளி. கரைச்சி பிரதேச மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு உதவிகள்!

0
356

தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் பிரான்ஸ் தமிழ் மக்களின் நிதி உதவியின் ஊடாக தாயகத்தில் பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள் அறநெறிப்பாடசாலையின் நெறிப்படுத்தலில்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் அங்கம்வகிக்கும பொருளாதார வறுமை மிக்க 100 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் கடந்த 09.05.2020 அன்று வழங்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் செய்ய முடியாது உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பினருக்கும் இதனை நெறிப்படுத்தி வழங்கிக்கொண்டிருக்கும் பாண்டியன்குளம் அறநெறிப்பாடசாலையினருக்கும். புலம்பெயர்ந்துவாழும் தமிழ் உறவுகளுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here