மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி கோணேசலிங்கம் விஜிதா வயது 29 என்பவர் ஸ்தலத்திலேயே பழியாகியதுடன் ஒருவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போவுக்கும் சொந்தமான பஸ்ஸும் ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியேதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி மாணவியே மரமடைந்ததுள்ளதுடன் அவரை ஏற்றிவந்த அவரின் வருங்கால கனவர் காயமடைந்துள்ளார்.