டெங்குக் காய்ச்சல் காரணமாக 9 வயது சுண்டிக்குளி மாணவி மரணம்!

0
341

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக நேற்று தெல்லிப்பழை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியை சேர்ந்த சி.சிறிசுதாகரன் பென்சிற் றஜாந்தி (வயது – 9) என்ற சிறுமியே மேற்படி உயிரிழந்தவராவார்.

கடந்த இரு வாரங்களாக குறித்த சிறுமி காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுக் காலை குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குருதிப்பெருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.                                    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here