யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!  

0
136

தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இருசக்கர உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதிலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது.
கோப்பாய் வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி தர்சீலன் (வயது 20) என்பவரே மேற்படி விபத்தில் உயிரிழந்ததுடன் அவருடன் பயணித்த மாணவர் ஒருவர்
படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த இருவரும் நேற்று முன்தினம் மாலை தீபாவளி தினத்துக்கு புத்தாடைகள் வாங்குவதற்காக யாழ் நகருக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது அதிக மழை பெய்துகொண்டி ருந்தவேளை சங்கிலியன் வீதியில் இருசக்கர உழவு இயந்திரம் பருத்தித்துறை வீதி நோக்கி வந்துள்ளது.
அப்போது வேகக்கட்டுப் பாட்டை இழந்த இளைஞர்கள் உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளனர். சம்பவ இடத்திலேயே மேற்குறித்த இளைஞர் மயக்கமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here