மன்னார் மடு பிரதான வீதியில் பேருந்தை வழிமறித்து மாணவர்கள் போராட்டம்!

0
186

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று காலை பாடசாலை மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 7.00 மணியளவில் மன்னார் மடு பிரதான வீதியில் சென்ற பேருந்தை குஞ்சுக்குளம், மாதா கிராம பகுதியில் ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு பேருந்து சேவை மேற்கொள்ளுமாறு கோரி இக் கவனவீர்ப்புப் போராட்டத்தை  மேற்கொண்டனர்.
குறித்த பகுதி யுத்தப்பாதிப்பிற்குள்ளான கிராமமாகும் மன்னாரில் பொதுமக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளுக்கு பஸ்ஸை சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் குஞ்சுக்குளம் மாதா கிராமத்திற்கு பேருந்து சேவை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் உட்பட அப்பகுதியிலுள்ளவர்கள் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here