கோப்பாய் பிர­தேச கிண­று­க­ளிலும் கழிவு எண்­ணெய்க் ­க­சிவு !

0
426

kalivuசுன்­னாகம் பிர­தே­சத்தில் காணப்­பட்ட எண்­ணெய்க்­க­சிவு வலி. கிழக்கு கோப்பாய் பிர­தேச செய­லாளர் பிரி­வையும் ஆக்­கி­ர­மித்­துள்­ளது. வலி. கிழக்கில் உள்ள கிண­று­களில் எண்ணெய் படிவு கலந்­தி­ருப்­பதால் 30 க்கும் மேற்­பட்ட நீர்த்­தொட்­டிகள் நிறு­வப்­பட்டு குடிநீர் விநி­யோகம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. மேலும் இது விஸ்­த­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

சுன்­னாகம் மின்­சார நிலைய கழிவு எண்ணெய் நிலக்கீழ் நீரில் கலந்­தி­ருப்­பதால் குடிநீர் பிரச்­சினை வலி. தெற்கு மற்றும் வலி. வடக்கு பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி இருந்­தது. இது தற்­பொ­ழுது வலி. கிழக்கு கோப்பாய் பிர­தேச செய­லாளர் பிரி­வையும் அச்­சு­றுத்­தத்­தொ­டங்­கி­யுள்­ளது.

வலி. கிழக்கு கோப்பாய் பிர­தேச செய­லாளர் பிரிவில் உரும்­பிராய், ஊரெழு, நீர்­வேலி உள்­ளிட்ட பகு­தி­களில் உள்ள கிண­று­களில் எண்ணெய் படி­வுகள் கலந்­தி­ருப்­ப­தோடு இரு­பா­லை­யிலும் தென்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

வலி. கிழக்கு பிர­தேச செய­லாளர் பிரிவில் குடிநீர் விநி­யோ­கத்­துக்கு நீர் பெற்று வந்த இரு­பா­லை­யி­லுள்ள கிணற்றில் எண்ணெய் படிவு ஏற்­பட்­டி­ருப்­பதால் அந்தக் கிணற்றில் இருந்து குடிநீர் பெறு­வது கைவி­டப்­பட்­டுள்­ளது. நீலக்கீழ் நீர்­பெ­று­வ­தற்கு தோண்­டப்­பட்ட ஆழ்­து­ளைக்­ கி­ண­று­களில் [குழாய்க்­கி­ணறு] பெரும்­பாலும் கழிவு எண்ணெய்க் கலப்பு தெரி­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பொது­மக்கள் தமது கிண­று­களின் நிலை தொடர்­பாக அறிந்து கொள்ள நீரை பரிசோதிப்பதற்கு விரும்பிய போதிலும் உரிய முறையில் நீரை பரிசோதித்து அதன் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here