நான்குமாதங்கள் சம்பளம் வழங்கப்படாமல் தெல்லிப்பளை வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்கள் அவதி!

0
150

SUKATARA TONDUதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பத்துப்பேருக்கு கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

நீண்டகாலம் சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றிவந்த இவர்களுக்கு கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் வரை சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசெம்பர் மாதத்தில் இருந்து இவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி சம்பளம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் தாம் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டால், அவர்கள் உரிய பதிலை வழங்க மறுத்துவருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here