பருத்தித்துறை கடலில் மூழ்கி வயோதிபர் பலி!

0
142

மரணச்சடங்கிற்கு சென்று விட்டு கடலில் நீராடிய வயோதிபர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகர மாக உயிரிழந்துள்ளார்.

நேற்றுச் சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் வியாபாரி மூலை, பருத்தித்துறைபகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த மகாதேவன் பிள்ளை கஜானந்தன் (வயது 69) என்ற வயோதிபரே மரண மடைந்தவராவார்.

வழமையாக மரணச்சடங்கிற்கு சென்று விட்டு வரும் அவர் தமது வீட்டிற்கு அருகா மையில் உள்ள வியாபாரி மூலைக் கடலில் குளித்துவிட்டு வருவதாகவும் அவ்வாறே நேற்று இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று விட்டு வந்த அவர் கடலில் குளித்த போது நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

அருகில் நின்றிருந்த சிலர் அவரைக் காப்பாற்ற முயற்சி எடுத்தும் அது பலனளிக்க வில்லை.

மரணமடைந்தவரின் சடலம் நேற்று மாலை பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here