சுன்னாகம் நலன்புரி முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை சாவு!

0
246

mallakam_campயாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர்  இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மதியம் குழந்தை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகத் தெரவிக்கப்படுகின்றது.

தற்போது குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குழந்தையின் பெற்றோரும் மயிலிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here