முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டமானது காணமல் போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன், சிவமோகன் ,நாங்கள் அமைப்பைச் சேர்ந்த சஜீவன்,மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக அந்தோணி மார்க் மற்றும் சகாயம் ,முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.