
கோப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு சுமார் ஒரு மாதகாலமாக தொடர் போராட்ட த்தினை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காணி விடுவிப்பை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் கண்டனப் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வொன்றும் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் “நாம் கேட்பது தனி நாடு அல்ல தாய் நிலமே” , ” வாழும் உரிமை எமக்கு உண்டு காணி உரிமை எமக்கு உண்டு சுய கௌரவம் எமக்கு உண்டு ” போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
Home ஈழச்செய்திகள் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் பல்கலை சட்டத்துறை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


