பிரான்சில் சிறிலங்கா அரசின் ,னவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பருதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட ,டத்தில் நடுகல் நிறுவப்பட்டுள்ளது.
தன் தொடக்க நிகழ்வு, குறித்த பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றன.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, நடுகல் மீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நடுகல்லின் மீது வைக்கப்பட்டுள்ள கேணல் பரிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விளக்கேற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிதியின் நினைவுரை இடம்பெற்றது.
அவர் தனது உரையில் கேணல் பரிதி அவர்கள் தொடர்பான விடயங்களைக் கூறிய அதேவேளை, மாவீரர் தினத்தில் அனைவரும் ஒன்றாகக் கலந்து உணர்வுகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்து உரையை நிறைவுசெய்தார்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
கடும் குளிரான காலநிலை நிலவுகின்றபோதும் பலர் கலந்துகொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.