இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் 3 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும், ஊடக அமைச்சுக்கும், வழங்கியுள்ள மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்க கோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து உந்துருளியில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் 3 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும், ஊடக அமைச்சுக்கும், வழங்கியுள்ள மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்க கோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்
மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 2 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்துகொண்டே இருந்தன.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த கடந்தகால ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த நல்லாட்சி அரசாங்கம், இன்று இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலை குறித்த விசாரணைகளையே ஆரம்பித்துள்ளது.
ஆனால் இந்நாட்டில் பெருந்தொகையாக கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்றுவரை ஆரம்பிக்கவில்லை.
மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துகின்றோம்.
இந்த போராட்டத்தின் ஊடாக நாங்கள் இந்த நாட்டின் நல்லாட்சி அரசுக்கும் புதிதாக ெதரிவுசெய்யப்பட்ட பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகத்துறை அமைச்சுக்கும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
1. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைக்கான விசாரணைகளை மிக விரைவாக ஆரம்பிக்க வேண்டும்.
2. இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.
3. நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
4. நடேசனின் படுகொலை விசாரணையை மட்டக்களப்பில் ஆரம்பிக்கவேண்டும்.
மேற்குறித்த எமது கோரிக்கைகளை ஏற்று மிகவிரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேற்படி எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்குதள்ளப்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.