யாழ். செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்டோரின் நினைவேந்தல்!

0
40

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை செம்மணிப் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து இவரைத் தேடிச் சென்ற குடும்ப உறுப்பினர்களும் உறவினரும் படுகொலை செய்யப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

(எரிமலை செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here