பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் நிறுத்தம்!

0
266

பிரான்சில் நிலவும் அதியுச்ச வெப்பம் காரணமாக மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி 2026 . நிறுத்தப்படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு அறிவித்துள்ளது..

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-


வணக்கம் 11 ஆம், 12 ஆம் நாட்களில் தமிழர் விளையாட்டுத்துறையினரால் 31 ஆவது ஆண்டாக நடாத்தப்படவிருந்த மாவீரர் மெய்வல்லுநர் போட்டி 2026 தெரிவுப்போட்டிகளின் 2 நாட்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெப்ப காலநிலை “ கனிக்குல் Canicule காரணமாக இரத்துச்செய்யப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
பிரான்சு நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கும் Canicule வெப்பநிலை காரணமாக பொது இடங்களிலும், விளையாட்டு மைதானங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இங்கு நிலவிவரும் காலநிலையைக் கவனத்திற் கொண்டு மக்களை பயணிக்குமாறு பிரான்சு நாட்டின் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அதற்கு மதிப்பளித்தும், தேசிய மாவீரர் நினைவு சுமந்து எம்மால் யூலை 11, 12 ஆம் நாட்களில் Stade de Mollin Juin 06, Avenue de Maréchal Juin 93600 Aulnay Sous Bois ஒழுங்கு செய்யப்பட்ட தெரிவுப் போட்டிகள், விளையாட்டு மைதானத்தின் பொறுப்பானவர்களால், மைதானம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையாலும், இப்போட்டிகள் நிறுத்தம் செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

நன்றி :நிர்வாகம் – த. ஒ. குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here