
பிரான்சில் நாளை 27.06.2026 சனிக்கிழமை ஆரம்பமாக இருந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2026 பிரான்சில் தற்போது நிலவும் அதியுச்ச வெப்பம் காலநிலை காரணமாக நிறுத்தப்படுகின்றது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விவரம் வருமாறு:-
எமது அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களுக்கான அவசர அறிவித்தல்!
25.06.2026
பிரான்சு நாட்டிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டிருக்கும் காலநிலை “ கனிக்குயில்’’ என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படும் கடும் வெப்பநிலையும் எம்மவர்கள் நிகழ்வும்!
பிரான்சு தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகமும் இணைந்து தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவுடன் 27 ஆம் நாள் முதல் நடாத்தப்படவிருந்த தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2026 ஆனது, நாட்டில் ஏற்பட்டிருக்கு அதிவெட்பநிலை காரணமாக நிறுத்த படுகின்றது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
கடந்த 22 ஆம் நாள் முதல் மேற்கு ஆபிரிக்க நாட்டிலிருந்து அதிகரித்து வரும் கடும்வெப்பநிலையானது பிரான்சு நாட்டின் ஊடாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிவரும் நிலையில் பிரான்சு மற்றும் ஸ்பெயின் நாட்டிலும் 40 பாகையைக் கடந்து 42 பாகையை அடையலாம் என்றும் எதிர்பார்க்கின்ற நிலையில் பிரான்சு நாட்டின் சுகாதார அமைச்சும் மக்களுக்கான பல்வேறு பாதுகாப்புகளை குழந்தைகள், பெரியவர்கள், இயலாதவர்கள் தேடிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதுடன், பாதுகாப்புச் சேவைகளையும் வழங்கியும் வருகின்றதொரு தற்போதைய நிலையையே காண்கின்றோம்.
பிரான்சு நாட்டின் Meteo என்ற காலநிலை நிறுவனம் பிரான்சு நாட்டின் அதிவெப்ப சிவப்பு நிற எச்சரிகையில் வைத்திருப்பதால் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது போல் எமது மக்களும், பிள்ளைகள், குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தும் 1100 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் இம்மாபெரும் இல்ல மெய்வல்லுநர் போட்டி பெரும் மனிதவலுவில், திட்டமிடலில், பயிற்சிகளில் உடல் மட்டுமல்ல பெரும் உளவியல் பலத்திற்காக அனைவரின் அர்ப்பணிப்புமிக்க பணியில் தயாராகியபோது, நாட்டில் ஏற்பட்டுள்ள காலமாற்றத்தின் காரணமாக நிறுத்தப்படுவது வேதனையை ஏற்படுத்தியபோதும், அதற்கு மேலாக எமது குழந்தைகள், இளையவர்கள், பெரியவர்களின் எம் மக்களின் நலமே மிகப்பெரிதெனக் கொண்டும், கருதியும் இதில் பணியாற்றுகின்ற அனைவரின் முடிவாகவுமே இது அமைந்திருப்பதால், அதற்கும், நாட்டின் சட்டதிட்டத்திற்கும் மதிப்பளித்து தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியின் 2026 நிறுத்தலுக்கு தமிழ்மக்கள் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.




