பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெறும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2026!

0
16

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு கடும் மழைக்கு மத்தியில் இடம்பெறுகின்றது.

இவர்களுள் இல்-து-பிரான்சின் (Île-de-France) தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கும் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தோருக்குமான புலன்மொழிவளத் தேர்வுகள் கடந்த மே 02, 03, 10 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்தேறின.

வளர்தமிழ் 1 முதல் 12 வரை விண்ணப்பித்த அனைவருக்குமான எழுத்துத் தேர்வு இன்று 06-06-2026 சனிக்கிழமை நடைபெறுகின்றது.

பரிஸ் மற்றும் இல்து பிரான்ஸ் மாணவர்களுக்கான தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 06.06.2026 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறும் அதேவேளை பிரான்சின் வெளிமாகாணங்களான நீஸ்(Nice), போசோலை (Beau Soleil), போர்தோ (Bordeaux) , முலூஸ் (Mulhouse), ஸ்ராஸ்பேர்க் (Strasbourg), நெவர் (Nevers), துலுஸ் (Toulouse), தூர்(Tours), ஜியான் (Gien), ரென் (Rennes), லியோன்(lyon) ஆகிய தமிழ்ச்சோலைகளுக்கான தேர்வும் இன்றைய தினம் அந்தந்த நகரங்களில் இடம்பெறுகிறது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தேர்விற்கு இம்முறை 5 ஆயிரத்து 985 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

இந்தத்தேர்வு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் 24ஆவது தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here